Thu. Jul 23rd, 2026

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் – கரியால் 15 அடி உயரத்தில் ஓவியம் வரைந்த கலைஞர்!

தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அகமதாபாத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம், அம்ரோஹாவில் கலைஞர் ஜுஹைப் அலி என்பவர் கரியைக் கொண்டு 15 அடி உயரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி புகைப்படத்தை உருவாக்கினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.