Fri. Jul 24th, 2026

கோவை கார் குண்டு வெடிப்பு – மேலும் ஒருவரை கைது செய்த போலீசார்!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீர் என்பவரை கைது செய்த NIA அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 14வது நபராக நசீர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.