மாட்டு முட்டி சிகிச்சையில் இருந்த முதியவர் உயிரிழப்பு?
திருவல்லிக்கேணியில் மாடு முட்டி சிகிச்சையில் இருந்த முதியவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த முதியவர் உடல் நலம் தேறி வந்ததாகவும், நுரையீரல் தொற்றால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாடு முட்டியதில் இடது கண்ணிற்கு மேலே நெற்றியில் காயம் ஏற்பட்டு, 3 தையல்கள் போட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
