Sun. May 4th, 2025

ஆசிய விளையாட்டுப் போட்டி – தங்கம் வென்ற மகளைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த தந்தை!

சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றது.

புனே விமான நிலையத்தில் கபடி வீராங்கனை சினேகல் ஷிண்டேவை குடும்பத்தினர் வரவேற்றனர்.

அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சினேகல் ஷிண்டே வெற்றி குறித்து கூறுகையில், “கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றோம். அதனால், இந்த முறை தங்கம் வெல்வதற்கு மிகப்பெரிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது.

அதனால், கடந்த ஒரு வருடமாக கடுமையாக உழைத்து தங்கத்தைக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பதக்கம் என் தந்தையின் கனவு. 2014-ல் காயம் காரணமாக அணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, 2018-லும் இதேதான் நடந்தது. அதனால், இந்தப் பதக்கம் பல வருட கனவு. நான் இப்போது கொண்டாடுவேன்.

கபடி வீராங்கனை சினேகல் ஷிண்டேவின் தந்தை பிரதீப் ஷிண்டே பேசுகையில், என் மகள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறாள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.