Sat. Mar 7th, 2026

இலங்கை சிறையிலிருந்து 17 மீனவர்கள் விடுதலை – விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 17 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அவரை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.