சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் | மாற்று மத நம்பிக்கையாளர்களின் வாழ்வியலும், ஆட்சிமுறையும் |

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் மாற்று மத நம்பிக்கையாளர்களின் வாழ்வியலும், ஆட்சிமுறையும்..

இந்த பொதுக் கூட்டத்தில் இறைவனின் அருட்கொண்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் ஆன்மிக வரலாறு மற்றும் அரசியல் புரட்சி மாற்று மதங்களின் நம்பிக்கை கொண்டவர்களின் வாழ்வியலில் அவர்களின் ஆட்சிமுறையும், சமூக நல்லிணக்கத்தை எவ்வாறு கடைப்பிடித்தார்கள் என்பதை பற்றியும், நாட்டின் பெரும் பகுதியை தன் வசம் வைத்துள்ள இறைதூதர் அவர்கள் மாற்று மத நம்பிக்கையாளர்களின் வாழ்வியலில் அவர்கள் ஆட்சி செய்த முறைகள் பற்றியும் விரிவாகவும் தெளிவாகவும் பொதுக்கூட்ட மேடைகளில் சிறப்புரையாற்றினார்.

இதில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் மாற்ற மதத்தின் சகோதரர்கள் கலந்து கொண்டனர்…
தலைமை சையத் சபியுல்ல, முன்னிலை வகித்த இஹ்சானுல்லா வரவேற்புரை முகமது ரபிக்காங்கிரஸ் கட்சியின் ஓசூர் தோகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத் மற்றும் திமுக. பிரமுகர்கள் மாதேஸ்வரன், மற்றும் பலர் உடனிருந்தனர்…