மனவளர்ச்சி குன்றிய குழந்தை யோகாசனம் செய்து சாதனை.
ஜூலை 28-2019
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த மணிவண்ணன், செல்வ கவிதா தம்பதியின் இரண்டாவது மகள் அபர்ணா. வயது 7. இந்த குழந்தை மனநலம் குன்றியதால்… பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து குணபடுத்த முடியாத நிலையில், இவரது பெற்றோர்கள் புளியங்குடியில் உள்ள மாற்று முறை மருத்துவர் காளித்துரை நடத்தும் உதயா ஸ்ரீ சூப்பர் ப்ரைன் யோகாவில் கடந்த ஆறு மாத காலமாக பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சி பெற்ற அபர்னாவுக்கு மூளை வளர்ச்சி திறன் அதிகரித்து தற்போது கண்களை மூடிகொண்டு வண்ணங்களை கூறி அசத்தி வருகிறார். பல வகையான யோகாசனங்களையும் செய்து காட்டி அசத்துகிறார்.

இது குறித்து அபர்னாவின் பெற்றோர்கள் கூறுகையில், உதயா ஸ்ரீ சூப்பர் ப்ரைன் யோகா பயிற்சியின் மூலம் என் குழந்தையின் வாழ்க்கை நல்ல மாற்றத்தை கண்டு உள்ளது. அறிவாற்றல் பேச்சு திறன் சுறு சுறுப்பு, கூர்ந்து கவனித்தல் நினைவாற்றால் போன்றவற்றில் தற்போது சிறந்து விளங்குகிறார்.

இது குறித்து பயிற்சி அளித்த மாற்று முறை மருத்துவர் காளித்துரையிடம் கேட்டபோது… இது போன்ற பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து குழந்தைகளும், கண்களை மூடி கொண்டு வண்ணங்களை கூற முடியும். ரூபாய் நோட்டின் மதிப்பு, அவற்றின் வரிசை எண், தனது முன்பு உள்ள பொருட்களையும் அடையாளம் கூற முடியும் என்றார். இந்த பயிற்சியின் மூலம் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்றும் குறிப்பிட்டார். பயிற்சி வாரத்திற்கு ஒரு முறை மட்டும் என இரண்டு மணி நேரம் நடை பெறுகிறது. மனவளர்ச்சி குன்றிய அபர்னாவின் சாதனையை கண்டு அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
நமது நிருபர்.
